பாகிஸ்தானில் வேன் எரிந்து 21 பேர் உயிரிழப்பு !

Spread the love

பாகிஸ்தானின் பேருந்து ஒன்று வேனின் மீது மோதி தீப்படித்து எரிந்த விபத்தில் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து 40 பயணிகளுடன் இஸ்லாமாபாத் நோக்கி, சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று, எதிரே எரிபொருள் ஏற்றி வந்த வேனின் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இந்த விபத்தில் பேருந்தும், வேனும் தீப்பற்றி எரிந்தன.

இதனால் பேருந்தில் இருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு பேருந்தில் இருந்து இறங்க முன்றனர். ஆனால் சம்பவத்தில் குழந்தைகள், பெண்கள் என 21 பேர் சம்பவ இடத்திலேயே தீயில் கருகி உயிரிழந்தனர். இதில் பேருந்து மற்றும் வேன் ஓட்டுநர்களும் உயிரிழந்தனர்.

இந்த தீ விபத்தில் இருந்து தப்பிய 16 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

இந்த நிலையில் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகிறார்கள்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours