அதிகரித்து கொண்டே செல்லும் பெட்ரோல், டீசல் விலை !

Spread the love

இந்தியாவில் ஏறக்குறைய 500 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராத நிலையில் பாகிஸ்தானில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே செல்வது நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போதைய நிலவரப்படி பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 290-க்கும் ஒரு லிட்டர் டீசல் 293 ரூபாய்க்கும் விற்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளாது. இந்தியாவில் பெட்ரோல் விலை ரூ.104 மற்றும் டீசல் விலை ரூ94 என விற்பனையாகும் நிலையில் பாகிஸ்தானில் இது இரு மடங்காக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானில் அந்நிய செலவாணி கையிருப்பு முற்றிலும் குறைந்துள்ளதால் அத்தியாவசிய பொருள்களை இறக்குமதி செய்ய முடியாத சூழலில் பாகிஸ்தான் உள்ளதாகவும் இதனால் பொருட்களின் விலை அளவுக்கு அதிகமாக அதிகரித்து உள்ளதாகவும் பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதே நிலை தொடர்ந்தால் நடுத்தர மக்கள் வறுமை நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்றுபொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours