6 முதல் பிளஸ்-2 வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டுத்தேர்வு ?!

Spread the love

6 முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கான காலாண்டுத்தேர்வு வருகிற 15-ந்தேதி தொடங்குகிறது. சென்னை, 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரையில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கான காலாண்டுத்தேர்வு செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டு இருந்த நாட்காட்டியில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் காலாண்டு, அரையாண்டு போன்ற தேர்வுகளுக்கு பொது வினாத்தாள் முறையை பள்ளிக்கல்வித்துறை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளது.

அதன்படி, நடைபெற உள்ள காலாண்டுத்தேர்வில் அமல்படுத்த இருக்கிறது.அதற்கேற்றாற்போல், தற்போது தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது. இதில் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான காலாண்டுத்தேர்வு வருகிற 15-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. பிளஸ்-1 வகுப்புக்கு காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.45 மணி வரைக்கும், பிளஸ்-2 வகுப்புக்கு பிற்பகல் 1.15 மணி முதல் மாலை 4.30 மணி வரைக்கும் நடக்கிறது. 6 முதல் எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு வருகிற செப்டம்பர் 19-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை தேர்வுகள் நடத்தப்பட இருக்கிறது.

இதில் 6, 7, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 10 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரையிலும், 9 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பு மாணவர்களுக்கு பிற்பகல் 2 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலும் தேர்வுகள் நடத்தப்பட இருக்கிறது. அதிலும் 6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு வருகிற 22-ந்தேதி உடற்கல்வி தேர்வு புதிதாக நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours