நடிகர் பவன் கல்யாண் சாலையில் படுத்து திடீர் போராட்டம்…ஆந்திராவில் பரபரப்பு!

Spread the love

சந்திரபாபு நாயுடுவை சந்திக்க சென்ற நடிகர் பவன் கல்யானுக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்ததால் சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திர முன்னாள் முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு செப்டம்பர் 9 தேதி காலை ஊழல் குற்றச்சாட்டில் ஆந்திர மாநில சிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இதனை தொடர்ந்து,சாலை மார்க்கமாக விஜயவாடாவில் உள்ள ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான விஷயங்களை விசாரிக்கும் சிறப்பு விசாரணை அலுவலகத்திற்கு சந்திரபாபு நாயுடு அழைத்து செல்லப்பட்டார்.

தொடர்ந்து சிறப்பு விசாரணை குழு அதிகாரிகள் சந்திரபாபு நாயுடுவிடம் விடிய விடிய விசாரணை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இன்று அதிகாலை 4 மணிக்கு அவரை விஜயவாடாவில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சிஐடி அதிகாரிகள் அழைத்து செல்லப்பட்டு அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த தகவலை அறிந்து வந்த ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் சந்திரபாபு நாயுடுவை சந்திக்க விஜயவாடா விரைந்தார்.அப்போது அங்கிருந்த காவல் துறையினர் பவன் கல்யாணை தடுத்து நிறுத்தியதால், கோபமடைந்த பவன் கல்யாண் தன்னுடைய காரின் மேல் அமர்ந்த நிலையிலும், சாலையில்படுத்தும் சுமார் 2 மணி நேரம் தூங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours