சர்ச்சை ஏற்படுத்திய காயத்ரி ரகுமான் !

Spread the love

சூரியனுக்கு ராக்கெட்டை அனுப்புவதும், அதைப் படிப்பதும் இயற்கையை சீர்குலைக்கும் செயலாகும் என்று பாஜக முன்னாள் நிர்வாகியும் நடிகையுமான காயத்ரி ரகுராம் கருத்து தெரிவித்து உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டத்தை தொடர்ந்து சூரியனின் வெளிப்புற பகுதியை ஆய்வு செய்ய ஆதித்யா எல்-1 விண்கலத்தை இன்று காலை 11.50 மணிக்கு இஸ்ரோ விண்ணில் ஏவியது.

இது குறித்து கருத்து தெரிவித்து காயத்ரி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:சில காரணங்களால் நான் ஆதித்யாL1 உடன் உடன்படவில்லை. இது முற்றிலும் முட்டாள்தனமாக உணர்கிறேன். இந்து தர்மத்தின் படி சூரியன் நமது கடவுள், நாம் வாழும் ஒவ்வொரு உயிரினமும் அதனால் தான் உயிர் வாழ்கிறது, இந்த பிரபஞ்சத்தில் ஒவ்வொரு கிரகமும் அதன் காரணமாகவே உயிர் வாழ்கிறது.

சூரியனுக்கு ராக்கெட்டை அனுப்புவதும், அதைப் படிப்பதும் இயற்கையை சீர்குலைக்கிறது. மனிதர்களாகிய நாம் பூமியை மட்டுமல்ல முழு பிரபஞ்சத்தையும் அழிக்கிறோம். இதனால் சில சில கிரகங்கள் அல்லது நமது பூமி கூட இயற்கை சீற்றம் ஏற்படலாம்.நம் நாட்டைக் கவனித்துக்கொள்வதற்குப் பதிலாக, அந்தச் பணத்தை ஏழைகளுக்குச் செலவிடுவதற்குப் பதிலாக, நமது பூமியை பாதுகாப்பதற்கு பதிலாக நாம் நாம் இயற்கைக்கு எதிராக செல்கிறோம். சந்திரன் சூரியன் அல்ல, சூரியன் உச்ச சக்தி. மோடி ஜி பேராசையின் காரணமாக இந்த ஆதித்யாL1 கணிக்க முடியாத ஒன்றாக இருக்கும், ஆபத்தாக இருக்கலாம்.

நாம் பூமியிலிருந்து மாறி சந்திரன் அல்லது சூரியன் அல்லது செவ்வாய் கிரகத்தில் வாழப் போகிறோமா? நமது நாட்டில் பொருளாதாரம் மற்றும் அன்றாட வாழ்க்கை கடினமாக உள்ளது. தயவு செய்து ஒரு சாமானியர் மற்றும் நம் தேசத்தின் மீது கவனம் செலுத்துங்கள்.நேர விரயம் மற்றும் பண விரயம் என்று கடுமையாக விமர்சித்துள்ளார்


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours