டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் முன்னணி வகிக்கும் இந்தியா !

Spread the love

சர்வதேச அளவில் 45 சதவீதத்திற்கும் மேற்பட்ட டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் இந்தியாவிலேயே நடைபெறுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஜி-20 டிஜிட்டல் பொருளாதார அமைச்சர்கள் கூட்டம் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது.

இதில் காணொளி முறையில் உ‍ரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளில் இந்தியா முன்னிலை வகிப்பதை சுட்டிக்காட்டினார்.
சர்வதேச அளவில் மேற்கொள்ளப்படும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளில் 45 சதவீதம் இந்தியாவிலேயே நடைபெறுவதாக பெருமிதம்‍ தெரிவித்தார்.

அதேபோன்று உலகிலேயே மிகக்குறைந்த செலவிலான இணையதள சேவையை இந்தியா அறிமுகப்படுத்தியிருப்பதகாவும், இந்த வசதியை, 85 கோடிக்கும் மேற்பட்ட இணையதள பயணாளர்கள் பயன்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வெளிப்படை தன்மையுடன் கூடிய நிர்வாகத்தை அளிப்பதற்காக தொழில்நுட்பங்களை இந்தியா பயன்படுத்தி வருவதால் முறைகேடுகள் பெரும்பாலும் தடுக்கப்பட்டிருப்பதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours