ISIS பயங்கரவாத அமைப்பின் தலைவர் கைது !

Spread the love

சென்னையில் ISIS பயங்கரவாத அமைப்பின் தலைவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். அதாவது, திருச்சூர் அடிப்படையான ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவரை சென்னையில் கைது செய்தனர் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள். தமிழ்நாடு, கர்நாடக என மாறி, மாறி தலைமறைவாக இருந்த ஐஎஸ் தலைவர் சையது நபில் போலி ஆவணங்கள் மூலம் நேபாளத்திற்கு தப்பிக்க முயன்றபோது கைது செய்யப்பட்டார்.

என்ஐஏ அதிகாரிகளால் கைதான ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சையது நபில் அகமதுவிடம் இருந்து முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டுவது, பயங்கரவாத தாக்குதலை நடத்த திட்டமிட்டது விசாரணையில் அம்பலமானதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே ஈரோடு வனப்பகுதியில் தலைமறைவாக இருந்த ஆசிப் என்பவரையும் என்ஐஏ அதிகாரிகள் கைது செய்திருந்த நிலையில், இன்று ISIS பயங்கரவாத அமைப்பின் தலைவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours