வெங்காய ஏற்றுமதி 40 சதவீத வரி !

Spread the love

உள்நாட்டு சந்தையில் வெங்காய விலை உயராமல் தடுக்கும் விதமாக, வெங்காய ஏற்றுமதிக்கு 40 சதவீத வரி விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

நேற்று முதல் அமலுக்கு வந்துள்ள இந்த உத்தரவு இந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் வெங்காயம் தட்டுப்பாடின்றி கிடைப்பதுடன் நீண்ட நாட்களுக்கு விலையை கட்டுக்குள் வைக்க உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வரிவிதிப்பு ஒரு தற்காலிக நடவடிக்க‍ை என்றும், உள்நாட்டு சந்தையில் வெங்காய விலை கட்டுக்குள் வந்தவுடன், வரி விதிப்பு நீக்கப்படும் எனவும் மத்திய அரசு கூறியுள்ளது.

இதனிடையே உள்நாட்டுத் தேவைக்கும், விலையேற்றத்தைத் தடுக்கவும் வெங்காயம் இருப்பு வைப்பதற்கான அளவை மூன்று இலட்சம் டன்னிலிருந்து ஐந்து இலட்சம் டன்னாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது.

ஏற்கெனவே தேசியக் கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பும், தேசிய வேளாண் கூட்டுறவுச் சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பும் மூன்று இலட்சம் டன் வெங்காயம் கொள்முதல் செய்திருந்தன. இந்நிலையில் இந்த ஆண்டில் இரு அமைப்புகளும் கூடுதலாகத் தலா ஒரு இலட்சம் டன் வெங்காயம் கொள்முதல் செய்து, இருப்பு வைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours