சென்னை வந்தடைந்த தமிழக மீனவர்கள் !

Spread the love

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 10 தமிழக மீனவர்கள் சென்னை வந்தடைந்தனர்.

இம்மாத தொடக்கத்தில் நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையை சேர்ந்த மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடித்து கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், துப்பாக்கி முனையில் ஒரு விசைப்படகினையும், அதில் இருந்த 10 தமிழக மீனவர்களையும் சிறைப்பிடித்து சென்றனர்.

எல்லை தாண்டி தங்கள் நாட்டு கடற்பரப்பில் நுழைந்ததாக கூறி கைது செய்யப்பட்ட 10 மீனவர்களையும் விசாரணைக்காக இலங்கை திரிகோணமலை கடற்படை முகாமில் வைத்திருந்ததாக தெரிவித்தனர்.

இந்த நிலையில் 10 மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டு சென்னை விமான நிலையத்திற்கு இன்று காலை வந்தடைந்தனர்.
அவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வேண்டிய ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொண்டனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours