தமிழ்நாட்டில் 10 கோடி மக்களுக்கு சர்க்கரை நோய்” வெளியான அதிர்ச்சி தகவல்!

Spread the love

தமிழ்நாட்டில் 10 கோடி மக்களுக்கு சர்க்கரை நோய் இருப்பதாக ஆராய்ச்சியில் தகவல் வெளியாகியுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை ராயபுரத்தில் உள்ள எம்.வி. மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கலந்துக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாட்டில் 10 கோடி மக்களுக்கு சர்க்கரை நோய் இருப்பதாகவும், தமிழ்நாட்டை பொறுத்த வரைக்கும் இரண்டு கோடி அளவில் நீரழிவு நோய் இருக்கலாம் என்ற தகவல் வெளியாகி இருப்பதாகவும், சென்னையில் மட்டும் 10-ல் இருந்து 16 விழுக்காடு ஆராய்ச்சி மாதிரியில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

தொடர்ந்து பேசியவர், தெரு நாய்களை கட்டுப்படுத்துவது மிகப்பெரிய சவாலாக இருப்பதாக கூறியவர், தெரு நாய்களை தத்தெடுத்து பாதுகாப்பதே இதற்கு நிரந்தர தீர்வாக இருக்கும் என்று கூறினார். மேலும், மாநகராட்சி மருத்துவமனைகளில் நிலவும் காலி பணியிடங்களை விரைவில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours