துாத்துக்குடியில் பல்வேறு கிராமங்களில் குடிநீர் தொட்டிகள், மின் கம்பங்களில் இருந்த ஜாதி சங்க வண்ணங்கள் அழிக்கப்பட்டன. ஜாதி ரீதியிலான தெருக்களின் பெயர்களும் மாற்றப்பட்டன.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் பள்ளி மாணவன் சின்னத்துரை சக மாணவர்களால் வெட்டப்பட்டார்.
ஜாதி ரீதியாக நடந்த இந்த தாக்குதல் தென் மாவட்டங்களில் மீண்டும் பதட்டத்தை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த நீதிபதி சந்துரு ஆணையம் அறிவிக்கப்பட்டுள்ளது. துாத்துக்குடி மாவட்டத்தில் இதனை எஸ்.பி., பாலாஜி சரவணன் செயல்படுத்த துவங்கி விட்டார்.
1990களில் அதிகம் பாதிக்கப்பட்ட மணியாச்சி, ஓட்டப்பிடாரம் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள ஜாதி சின்னங்கள் ஜாதி சங்கங்களின் வண்ணங்களை, பெயர்களை அந்த அந்தந்த ஊர் பொதுமக்களின் ஒத்துழைப்போடு அழிக்கும் பணி நேற்று நடந்தது.
+ There are no comments
Add yours