தமிழகத்தின் தலைநகரான சென்னை மாநகருக்கு இன்று 384 ஆவது பிறந்தநாள் . வெள்ளையர்களின் கிழக்கு இந்திய கம்பெனி தங்களது வியாபார தந்திரத்தால் , தாமல் வெங்கடப்பா நாயக்கரிடம் இருந்து ஒரு சிறு நிலத்தை வாங்கி சென்னை நகரத்தை உருவாக்க காரணமாக இருந்த இந்த ஆகஸ்ட் 22 ஆம் நாள் சென்னை தினமாக ஒவ்வரு ஆண்டும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது .
![](https://politrics.in/wp-content/uploads/2023/08/image-109-1024x768.png)
இந்நிலையில் சென்னையின் 384-வது பிறந்தநாளுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில் தற்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவரது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இ.பி.எஸ் வெளியிட்டுள்ள செய்துகுறிப்பில் கூறிருப்பதாவது :
சாதி மத பேதமின்றி வந்தோரை வாழ வைக்கும் தமிழகத்தின் தலைநகரமாக மட்டுமின்றி கலை நகரமாகவும் கலாச்சார நகரமாகவும் விளங்கும் சென்னை தோற்றுவிக்கப்பட்ட தினம் இன்று!
கனவுகளோடு நாடி வருபவர்களுக்கு முகவரி தேடித் தந்த சென்னையின் வயது 384.
![](https://politrics.in/wp-content/uploads/2023/08/image-110-1024x768.png)
உழைப்பிற்கு அடையாளமாக பெயர் பெற்ற சென்னையின் வரலாற்றை பேணி காப்போம்! சென்னையின் பெருமையை போற்றுவோம்! அனைவருக்கும் மெட்ராஸ் தின வாழ்த்துகள்
இது நம்ம சென்னை! என இ.பி.எஸ் வெளியிட்டுள்ள செய்துகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours