செங்கழுநீர் அம்மன் கோயில் தேரோட்டம் !

Spread the love

வெகு விமரிசையாக நடைபெறும் பிரசித்திப்பெற்ற வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோயில் தேரோட்டம்.

அரியாங்குப்பம் வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவில் தேரோட்டம் நடைபெறுவதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. புதுச்சேரியை அடுத்த வீராம்பட்டினத்தில் பிரசித்தி பெற்ற செங்கழுநீர் அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் தேரோட்டம் காலை 8 மணியளவில் நடைபெற்றது. விழாவில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், தொகுதி எம்.எல்.ஏ. பாஸ்கர் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.

துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர்.

தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours