வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து தாய், மகன் உயிரிழப்பு!

Spread the love

ஈரோட்டில் கனமழையின் காரணமாக வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் தாய், மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரிய அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த ஜாகீர் உசேன் என்பவர், பேக்கரி ஒன்றில் பணியாற்றி வருகிறார். நேற்று கனமழை பெய்ததை அடுத்து அவர் இரவு கடையிலேயே தங்கிவிட்டார்.

வீட்டில் அவரது மனைவி சாரம்மா (34), மகன் முகமது அக்தர் (12) ஆகிய இருவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். இந்நிலையில், மழையின் காரணமாக இன்று அதிகாலை வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது.

இதில் தாயும், மகனும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறை வீரர்கள் மற்றும் காவல்துறையினர் உடல்களை மீட்டனர்.

இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours