சிறை வாசலில் அடம் பிடித்து அழுத சிவசேனா நிர்வாகி!

Spread the love

ரியில் விநாயகர் சதுர்த்திக்கு நிதி கேட்டு தகராறு செய்த இந்து சேனா பிரமுகர் சிறை செல்ல மறுத்து அடம்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகர்கோவில் வடசேரி பகுதியில் சிஎஸ்ஐ கிறிஸ்தவ பேராயத்தின் நிர்வாகத்தின் கீழ் பாலிடெக்னிக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரிக்கு வந்த மூன்று பேர் விநாயகர் சதுர்த்தி கொண்டாட நன்கொடை தருமாறு கேட்டனர்.

அப்போது நீங்கள் யார்? எதற்காக உங்களுக்கு எதற்கு பணம் தர வேண்டும் என்று பாலிடெக்னிக் நிர்வாகிகள் கேட்டனர். இதனால் அவர்களுக்கும், நன்கொடை கேட்டவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

அந்த வீடியோவில், நன்கொடை கேட்டவர்கள், தங்களை இந்து சேனா அமைப்பினர் என்று கூறுவதும் பதிவாகி இருந்தது. இதையடுத்து கல்லூரி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் அவர்கள் மீது மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

விசாரணையில் பணம் கேட்டு மிரட்டியது, இந்து சேனா நிர்வாகி பிரதீப் குமார், பிரதீஷ் மற்றும் மூர்த்தி என தெரியவந்தது. இவர்களில் இந்து சேனா நிர்வாகி பிரதீஷ் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவான இரண்டு நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

இந்நிலையில் பிரதீஷை (36) போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். விசாரித்த நீதிபதி அவரை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். எனவே அவரை நாகர்கோவில் கிளை சிறைக்கு அழைத்துச் சென்றனர்.

அப்போது சிறைவாசலுக்கு சென்ற அவர், உள்ளே செல்ல மாட்டேன் என்று அடம்பிடித்து அழுதுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீஸார் அவரை சமாதானப் படுத்தி உள்ளே அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தால் சிறை முன்பு சற்று நேரம் பரபரப்பு நிலவியது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours