வினாடிக்கு 12,500 கனஅடி நீர் திறப்பு !

Spread the love

காவிரியில் இருந்து தண்ணீர் திறக்கக்கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ள நிலையில், கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு காவிரியில் திறந்து விட வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு முறையாக திறந்து விடவில்லை. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்து காணப்படுகிறது. குறுவை சாகுபடிக்காக பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் கருகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீரை முறைப்படித் திறந்துவிட உத்தரவிட வேண்டுமென அண்மையில் முதல்வர் ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில் டெல்லியில் நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தார், ‘சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி தமிழகத்துக்கு வழங்கவேண்டிய நீரை கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும். தினமும் வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிட வேண்டும்’ என்று உத்தரவிட்டார். ஆனால் இதுகுறித்து அதிகாரிகளுடன் கலந்து பேசித்தான் முடிவெடுக்க முடியும் என கர்நாடக முதல்வர் தெரிவித்தார்.

இந்நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 10000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது. தற்போது தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

தற்போது பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து வினாடிக்கு 12,500 கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இது அகண்ட காவிரியாக தமிழகம் நோக்கி வந்து கொண்டிருக்கிறது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours