இந்தோனேஷியா செல்லும் பிரதமர்… நிகழ்ச்சிகள், சந்திப்புகள் என்ன தெரியுமா ?!

Spread the love

பிரதமர் நரேந்திர மோடி 20வது ஆசியான்-இந்தியா உச்சி மாநாடு மற்றும் 18வது கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இன்று இரவு இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகார்த்தா நகருக்குச் செல்கிறார்.

முன்னதாக, பிரதமர் மோடி இன்று, அமைச்சர்கள் குழுக் கூட்டத்திலும், கேபினெட் அமைச்சரவைக் கூட்டத்திலும் பங்கேற்றார்.

இந்நிலையில், இன்று இந்தோனேஷியா செல்லும் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க இருக்கும் நிகழ்ச்சிகள், சந்திப்புகள் போன்ற பயணத் திட்டம் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, பிரதமர் நரேந்திர மோடி தனது இந்தோனேஷியா பயணத்தை முன்னிட்டு இரவு 7:30 மணி வரை மீண்டும் கூட்டங்களில் பங்கேற்று ஆலோசனை நடத்த உள்ளார். அதன் பின், ஜகார்த்தாவுக்குச் தன் பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார்.

அங்கிருந்து இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி ஜகார்த்தாவுக்கு புறப்படுவார். அவர் சுமார் 7 மணிநேரம் விமானத்தில் பயணித்து நாளை செப்டம்பர் 7ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு ஜகார்த்தா சென்றடைவார்.

அதாவது, இந்திய நேரப்படி காலை 7 மணிக்கு அவர் ஆசியான் இந்தியா உச்சி மாநாடு நடைபெறும் இடத்திற்குச் சென்று உச்சிமாநாட்டில் பங்கேற்பார்.

பின்னர், காலை சரியாக 8:45 மணிக்கு, பிரதமர் மோடி கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பங்கேற்பார். இந்த மாநாடுகள் முடிந்த முடிந்த உடனேயே, பிரதமர் மோடி நாடு திரும்புகிறார்.

தொடர்ந்து, காலை 11:45 மணிக்கு டெல்லிக்கு விமானம் மூலம் புறப்படும் அவர், சரியாக மாலை 6:45 மணிக்கு தலைநகர் டெல்லியை மீண்டும் வந்தடைவார்.

நாளை மறுநாள் செப்டம்பர் 8ஆம் தேதி, பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஜோ பைடனைச் சந்தித்துப் பேச உள்ளார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட மூன்று நாடுகளின் தலைவர்களுடன் முக்கியமான இருதரப்பு சந்திப்புகளை பிரதமர் நடத்த இருக்கிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours