பாஜகவில் இருந்து விலகிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் கொள்ளுப்பேரன்…!

Spread the love

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் கொள்ளுப்பேரன் சந்திரகுமார் போஸ் பாஜகவில் இருந்து திடீரென விலகியுள்ளார்.

இந்தியா சுதந்திரம் அடைந்ததில் பெரும் பங்கு விடுதலை போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸூக்கு உண்டு. அதுமட்டுமல்லாமல், இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கிய பெருமையும் நேதாஜியையே சேரும்.

இதனிடையே, தற்போது நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் கொள்ளுப்பேரன் சந்திரகுமார் போஸ் பாஜகவில் இருந்து திடீரென விலகியுள்ளார். சந்திரகுமார் போஸ் கடந்த 2016ஆம் ஆண்டு பாஜகவில் சேர்ந்தார். அப்போது அவருக்கு மேற்குவங்காள பாஜக துணைத்தலைவர் பதவி வழங்கப்பட்டது.

மேலும், கடந்த 2019ம் ஆண்டு தேசிய குடியுரிமை திருத்தச்சட்டம் உள்பட பல்வேறு விவகாரங்களில் பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டை சந்திரகுமார் போஸ் எடுத்தார்.

இதனால், கடந்த 2020ம் ஆண்டு பாஜக துணைத்தலைவர் பதவியில் இருந்து சந்திரகுமார் போஸ் அதிரடியாக நீக்கப்பட்டார். ஆனாலும், பாஜகவில் சந்திரகுமார் போஸ் தொடர்ந்து நீடித்து வந்தார்.

இந்நிலையில் தான் தற்போது திடீரென சந்திரகுமார் போஸ் பாஜகவில் இருந்து இன்று விலகியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக, சந்திரகுமார் போஸ் தன் ராஜினாமா கடிதத்தை பாஜக தலைவர் ஜேபி நட்டாவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

பாஜகவில் இருந்து விலகுவதற்கு முக்கிய காரணம் நேதாஜியின் கொள்கைகளை பரப்புவதில் பாஜக மத்திய தலைமையும், மாநில தலைமையும் ஆதரவு தராததால் தான் கட்சியில் இருந்து விலகுவதாக சந்திரகுமார் போஸ் தெரிவித்துள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours