2 லட்சம் கோடி ரூபாயாக உயர்கிறது… எத்தனால் சார்ந்த பொருளாதாரம் !

Spread the love

பெட்ரோலில் கூடுதல் எத்தனால் கலப்பதால் எத்தனால் சார்ந்த பொருளாதாரம் 2 லட்சம் கோடி ரூபாயாக உயர்கிறது என மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

எத்தனால் மூலம் இயங்கும் கார்களை புதுதில்லியில் இன்று தொடங்கி வைத்து பேசிய அவர், தன்னிறைவு பெற்ற நாடாக இந்தியா உருவாகும் போது எரிபொருள் இறக்குமதி செய்வதற்கான தேவை இல்லாமல் போகும் என்று கூறினார்.

எரிபொருள் இறக்குமதி தற்போது 16 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது என குறிப்பிட்ட அவர், எரிபொருள் தேவைக்காக இந்தியா பிற நாடுகளை சார்ந்திருக்கும் நிலையை குறைக்க வேண்டும் என்று கூறினார்.

போக்குவரத்து துறையின் மூலமாக மட்டுமே 40 சதவீதம் மாசு ஏற்படுவதாக தெரிவித்த அவர், அதிகப்படியான மாசு வெளியேறுவதை தடுப்பதற்கு நீடித்த மாசு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.
எத்தனாலின் உதவியோடு இந்திய வேளாண் துறையின் வளர்ச்சி 12 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை இருக்கும் என்றும், இதன் மூலம் ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் கூறினார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours