ஆப்பிரிக்க நாடுகளுடனான தொடர்புக்கு முன்னுரிமை !

Spread the love

ஜி 20 அமைப்பில் ஆப்பிரிக்க நாடுகளின் ஒன்றியத்தை உறுப்பினராகச் சேர்க்க வலியுறுத்தி அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளதாகப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

தில்லியில் கென்ய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆடன் ஃபார் உடன் ராஜ்நாத் சிங், இரு நாடுகளிடையான பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்துப் பேச்சு நடத்தினார்.

அப்போது பேசிய ராஜ்நாத் சிங், ஆப்பிரிக்க நாடுகளுடனான தொடர்புக்கு இந்தியா முன்னுரிமை அளிப்பதாகத் தெரிவித்தார்.

வணிகம், பொருளாதாரம், கல்வி, சுகாதாரம் ஆகிய துறைகளில் இருநாடுகளிடையான ஒத்துழைப்பு வளர்ச்சியும் வலுவும் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டார்.
இந்தியாவும் கென்யாவும் ஐ.நா. பாதுகாப்புச் சபையில் உறுப்பினர்களாக உள்ளதாகவும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

இருதரப்புப் பேச்சில் பங்கேற்ற கென்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏடன் பேர் டுயல் ( Aden Bare Duale ), இந்தியா – கென்யா இடையே விடுதலைக்கு முன்பிருந்தே உறவுகள் உள்ளதாகத் தெரிவித்தார்.
நிலவின் தென்துருவப் பகுதியில் சந்திரயான் 3 விண்கலத்தைத் தரையிறக்கிய இந்தியாவுக்குப் பாராட்டுத் தெரிவித்தார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours