தேர்தல் தோல்வி பயத்தால் சிலிண்டர் விலை குறைப்பு… ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம் !

Spread the love

வருங்காலங்களில் மேலும் பல பரிசுகளை பிரதமர் மோடி அறிவிப்பார் என்று ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.200 குறைப்பு குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:-

“தேர்தல் தோல்வி பயத்தால் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை பிரதமர் மோடி குறைத்துள்ளார். கர்நாடகாவில் பாஜக தோல்வி அடைய சிலிண்டர் விலையேற்றமே முக்கிய காரணம். ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசு ரூ.500-க்கு சமையல் எரிவாயு சிலிண்டரை வழங்கி வருகிறது. பாஜக நிர்வாக சீர்கேட்டால் துன்பப்பட்ட மக்கள் ராஜஸ்தான் அரசின் திட்டத்தால் நிம்மதி அடைந்துள்ளனர்.

3 மாதத்தில் தேர்தல் நடக்கவுள்ள 5 மாநிலங்களிலும் தோல்வியை எதிர்நோக்கியுள்ளது பாஜக. 5 மாநில தேர்தல், மக்களவை தேர்தலில் தோல்வி அடைவோம் என்று பிரதமருக்கு பயம் வந்து விட்டது. வருங்காலங்களில் மேலும் பல பரிசுகளை பிரதமர் மோடி அறிவிப்பார் என்று எதிர்பார்க்கலாம்” என்று கூறினார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours