ஒன்றோடு ஒன்று இணைந்து செயலாற்ற வேண்டியது அவசியம்.. அமைச்சர் சர்பானந்த சோனோவால் !

Spread the love

நோய்கள் வராமல் தடுப்பதில், பாராம்பரிய மருத்துவமும், நவீன மருத்துவமும் ஒன்றோடு ஒன்று இணைந்து செயலாற்ற வேண்டியது அவசியம் என்று மத்திய ஆயுஷ் அமைச்சர் சர்பானந்த சோனோவால் தெரிவித்துள்ளார்.

அஸாம் மாநிலம் குவஹாத்தியில், வடகிழக்கு மாநிலங்களில் ஆயுஷ் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் இவ்வாறு கூறினார்.
ஏனெனில், இவ்விரு மருத்துவங்களின் இலக்கும் ஒன்றாகவே இருப்பதாகவும் தெரிவித்தார்.

மக்களுக்கு தரமான சிறந்த சுகாதார சேவையை வழங்க மத்திய சுகாதார மற்றும் ஆயுஷ் அமைச்சகங்கள் இணைந்து பணியாற்றி வருவதாகக் குறிப்பிட்டார்.

தற்போது நாடு முழுவதும் உள்ள 19 எய்ம்ஸ் மருத்துவமனைகளில் ஆயுஷ் துறை இயங்கி வருவதாகவும் சர்பானந்த சோனாவோல் தெரிவித்தார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours