அதிர்வலையை ஏற்படுத்திய நிர்மலா சீத்தாராமன்… அப்படி என்ன பேசினார்!

Spread the love

புதிய தேசிய கல்வி கொள்கை எந்த மொழியையும் திணிக்கவில்லை என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் புதிய கல்விக் கொள்கை 2020ல் அமல்படுத்த சமீபத்தில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து புதிய கல்விக் கொள்கை அமலுக்கு வந்தது. இந்த கல்விக் கொள்கையின் மூலம் மும்மொழி திட்டம் முன் மொழியப்பட்டது. புதிய தேசிய கல்வி கொள்கையை தமிழகத்தில் பல்வேறு அரசியல் தலைவர்களும் தேசிய அளவில் பல கல்வியாளர்களும் எதிர்க்கத் தொடங்கியுள்ளனர்.

ஏற்கெனவே தமிழகத்தில் ஆங்கிலம் தமிழ் என இரு மொழிக் கொள்கை கடைப்பிடிக்கப்பட்டு வந்திருக்கக்கூடிய நிலையில் மும்மொழிக் கொள்கை அவசியமில்லாதது என பல அரசியல் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். தமிழக கிராம புறங்களில் உள்ள ஏழை எளிய மாணவர்கள் நீட் தேர்வால் மருத்துவம் படிப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும் மத்திய அரசு நீட் தேர்வை அரசியலாக்க விரும்பவில்லை என்றார்.புதிய தேசிய கல்வி கொள்கை எந்த மொழியையும் திணிக்கவில்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்தார்.

அரசியல்வாதியின் பிள்ளைகள் அரசியலில் இருப்பது வாரிசு அரசியல் அல்ல என்றும் அவர் தெரிவித்தார். மேலும் ஒட்டுமொத்த துறைகளை ஒரு குடும்பம் மட்டுமே வைத்து ஆள்வதே வாரிசு அரசியல் என்றும் வாரிசு அரசியல் தான் நாட்டிற்கு மிகவும் ஆபத்தானது என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours