சந்திரயான் – 3 விண்கலத்தில் இருந்து பிரிக்கப்பட்ட விக்ரம் லேண்டரின் சுற்றுப்பாதை உயரம் குறைக்கப்பட்டது.
அடுத்த வேகம் குறைக்கும் நடவடிக்கை நாளை மறுநாள் நடைபெறும் என இஸ்ரோ தகவல் வெளியிட்டுள்ளது.
வரும் 23 ஆம் தேதி நிலவில் தரையிறங்க உள்ள லேண்டர் நல்ல முறையில் செயல்பட்டு வருவதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
![](https://politrics.in/wp-content/uploads/2023/08/Untitled-1-9-1.jpg)
வரும் 23-ஆம் தேதியன்று நிலவின் தென்துருவத்தில் விக்ரம் லேண்டரை தரையிறக்க இஸ்ரோ தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
விக்ரம் லேண்டர் தரையிறங்கியதும் அதற்குள் இருந்து பிரக்யான் ரோவர் நிலவின் மேற்பரப்பில் ஊர்ந்து சென்று ஆய்வு மேற்கொள்ளும் எனவும் இஸ்ரோ கூறியுள்ளது.
+ There are no comments
Add yours