இமாச்சலப் பிரதேசத்தில் சீரமைப்புப் பணிகள் !

Spread the love

மழை வெள்ளம் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட இமாச்சலப் பிரதேசத்தில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்காகத் தேசியப் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து முதற்கட்டமாக 200 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

கடந்த மாதத்தில் மாநிலப் பேரிடர் நிவாரண நிதியாக இரு தவணைகளில் மொத்தம் 360 கோடியே 80 இலட்ச ரூபாயும், இந்த மாதத்தில் தேசியப் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து முந்தைய தவணைகளில் 189 கோடியே 29 இலட்ச ரூபாயும் ஏற்கெனவே இமாச்சலப் பிரதேசத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்தியத் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லா மாவட்டத்தில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்டனர். மீட்பு மற்றும் சீரமைப்புப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.

மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை மத்திய அமைச்சரும், பாஜக தலைவரும் சந்தித்து ஆறுதல் தெரிவித்ததுடன், அவர்களுக்குத் தேவைப்படும் உதவிகளை மத்திய மாநில அரசுகள் செய்து தரும் என உறுதியளித்தனர்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், இமாச்சலப் பிரதேசத்தில் சீரமைப்புப் பணிக்கு மத்திய அரசு மொத்தம் 662 கோடி ரூபாய் வழங்கியுள்ளதாகத் தெரிவித்தார். மாநில அரசுக்குத் தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்வதாகப் பிரதமர் நரேந்திர மோதி உறுதியளித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours