சுமைகளைக் குறைத்து எளிமையாக்க நடவடிக்கை… நிர்மலா சீதாராமன் !

Spread the love

நிதி நிர்வாக சீர்திருத்தக் கொள்கையில் வெளிப்படைத்தன்மை மற்றும் சீரான செயல்திறனில் கவனம் செலுத்துவது அவசியம் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம் கெவாடியாவில் ஜி20 மாநாட்டின் ஒரு பகுதியாக நிதி அமைச்சகம் மற்றும் வெளி விவகாரத்துறை அதிகாரிகளுக்கான செயல்திறன் மேம்பாட்டுக் கூட்டம் இரண்டு நாட்கள் நடைபெற்றது.

இதன் நிறைவுக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய அரசு கொள்கையின் படி, நாடு முழுவதும் நிதி நிர்வாகத்தில் உள்ள சுமைகளைக் குறைத்து எளிமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

எளிமையான நடைமுறைக‍ளை கையாள வேண்டியது தற்போதைய தேவை என்று குறிப்பிட்ட அவர், இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

கூட்டத்தில் நிதித்துறை இணை அமைச்சர் பகவத் காரத் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours