நிலவில் தரையிறங்கும் சந்திரயான்-3… நேரலையில் காண !

Spread the love

கடந்த ஜூலை மாதம் 14ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி தளத்தில் இருந்து நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்ணில் செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து புவிசுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக உயர்த்தப்பட்டு நிலவின் சுற்றுவட்டப்பாதையில் கடந்த 5ஆம் தேதி நுழைந்தது.

பின்னர், ஆக.16 ஆம் தேதி இறுதி சுற்றுவட்டப் பாதையில் உயரம் வெற்றிக்கரமாக குறைக்கப்பட்டு நிலவிற்கும் சந்திரயான்-3 விண்கலத்திற்கும் இடையிலான குறைந்தபட்ச தூரம் 153 கிலோ மீட்டராகவும், அதிகபட்ச தூரம் 163 கிலோ மீட்டர் என்ற அளவில் விண்கலம் பயணித்தது.

ஆக.17 ஆம் தேதி பெங்களூருவில் இஸ்ரோ மையத்தில் சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து லேண்டரை பிரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்ட நிலையில், சரியாக மதியம் 1.15 மணிக்கு உந்து சக்தி கலனில் இருந்து பிரிந்தது விக்ரம் லேண்டர்.

தொடர்ந்து, ஆக.18-ஆம் தேதி விண்கலத்தில் இருந்து பிரிந்த லேண்டரின் சுற்று வட்டப்பாதை குறைக்கப்பட்டது. அதன் பின்னர், 2வது முறையாக ஞாயிறு அதிகாலை 2 மணியளவில் லேண்டரின் சுற்று வட்டப்பாதை குறைக்கப்பட்டது.

மேலும், இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில் சந்திராயன் 3 எடுத்த நிலவின் புதிய புகைப்படங்களையும் வெளியிட்டது.

அதையடுத்து இன்று சரியாக மாலை 6.04 மணிக்கு சந்திரயான் 3-ன் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் எனவும் இஸ்ரோ அறிவித்துள்ளது. மேலும், இந்த நிகழ்வை மாலை 5.20 முதல் இஸ்ரோ நேரலை செய்யவுள்ளதாகவும் அறிவித்துள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours