தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67வது பொதுக்குழு கூட்டம்.. நாசர் உருக்கம்!!

Spread the love

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67வது பொதுக்குழு கூட்டம் சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்க வளாகத்தில் சங்க தலைவர் நாசர் தலைமையில் தொடங்கியது.

இந்த கூட்டத்தில் நடிகர் சங்க உறுப்பினர்கள் மற்றும் நாடக கலைஞர்கள் என 1000கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.மேலும் மாரடைப்பால் உயிரிழந்த நடிகர் மாரிமுத்து உட்பட கடந்த காலங்களில் உயிரிழந்த 64 சங்க உறுப்பினர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டத்து.

இதனை தொடர்ந்து தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் பொது கூட்டத்தில் உரையாற்றினார்.அப்போது பேசிய அவர் இது நடிகர் சங்கம் அல்ல குடும்பம் என்று தெரிவித்த அவர் ,சட்டசிக்கலினால் இந்த பொதுக்குழு கூட்டம் தள்ளிப்போனது.

தள்ளி செல்லச்செல்ல காதலுக்கான ஏக்கம் இன்னும் பெருகும் என்பதைப் போல, தள்ளிச் செல்ல செல்ல உங்களை பார்க்க வேண்டும் என்கின்ற ஆர்வம் மேலும் அதிகரித்தது என தெரிவித்தார்.

மேலும் நமக்கு உடம்பும் உடலும் தான் முக்கியம் அடிக்கடி மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்று நடிகர் சங்க உறுப்பினர்கள் மற்றும் நாடக கலைஞர்களிடம் வலியுறுத்தினார்.

மேலும், மூத்த நடிகர்கள், நாடக கலைஞர்களுக்கு ஓய்வூதியம் வழங்குதல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours