நடிகர் மாரிமுத்து மரணம்… கதறியழுத ‘எதிர்நீச்சல்’ குழுவினர் !

Spread the love

நடிகர் மாரிமுத்துவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்திருந்த ‘எதிர்நீச்சல்’ குழுவினர் கதறி அழுத காட்சி அங்கிருந்தவர்களைக் கலங்கடிக்கச் செய்துள்ளது.

இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து இன்று காலை டப்பிங் பணியின் போது திடீர் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவரது மறைவு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதற்கு முன்பு பல படங்களில் பணிபுரிந்திருந்தாலும் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ சீரியல் அவரை பரவலாக ரசிகர்களிடையே கொண்டு போய்ச் சேர்த்தது.

இந்நிலையில், நடிகர் மாரிமுத்துவுக்கு ‘எதிர்நீச்சல்’ சீரியல் நடித்து வரும் ஹரிபிரியா, பிரியதர்ஷினி, கமலேஷ், இயக்குநர் திருச்செல்வம் உள்ளிட்ட பலரும் நேரில் வந்து தங்களது இறுதி அஞ்சலியை செலுத்தினர்.

சீரியலில் மாரிமுத்துவின் தம்பியாக நடிக்கும் கமலேஷ் பேசும் போது, “டப்பிங்கின் போது நான் தான் அவருடன் இருந்தேன். வியர்க்கிறது என்று வெளியே சென்றார். சரி… காற்று வாங்கி விட்டு திரும்பி வந்துவிடுவார் என எதிர்பார்த்தால், அவரே கார் எடுத்துக் கொண்டு ஹாஸ்பிட்டல் சென்றுள்ளார். அவரது மகள் தான் எங்களுக்குத் தகவல் சொன்னார். கண்ணிமைக்கும் நேரத்தில் எல்லாம் நடந்துவிட்டது. யாராலும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு அவருடையது” என்றார்.

இந்தத் தொடரின் இயக்குநர் திருச்செல்வம், “இன்று நாங்கள் ஷூட்டிங்கிற்கு தயார் செய்து கொண்டு இருந்தோம். இன்று அவருக்கு ஷூட் இல்லாததால் அவர் டப்பிங் பேசிவிட்டு ஷூட்டிங் வந்து விடுதாகச் சொன்னார். அதற்குள் இப்படி நடந்துவிட்டது. யாருமே எதிர்பார்க்காத ஒரு சம்பவம் இது. வேறு யாரை விடவும் அவருடைய குடும்பத்திற்கு பெரிய இழப்பு இது. நாங்கள் அதிர்ச்சியில் இருக்கிறோம்” என்றார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours