இமாச்சல பிரதேசத்திற்கு நிதியுதவி அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !

Spread the love

தமிழக அரசு சார்பில் இமாச்சல பிரதேசத்திற்கு ரூ.10 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை, இமாச்சல பிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை ஆயிரக்கணக்கான வீடுகள், அரசு மற்றும் தனியார் சொத்துக்கள் சேதமடைந்துள்ளன. இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

முன்னதாக வெள்ள பாதிப்புகள் குறித்து இமாச்சல பிரதேச முதல்-மந்திரி சுக்வீந்தர் சிங்கிடம் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இந்த நிலையில் இமாச்சல பிரதேசத்தில் நடைபெறும் நிவாரண பணிகளுக்காக தமிழக அரசு சார்பில் ரூ.10 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours