“மதுரை மாநாடு மாபெரும் தோல்வி” எடப்பாடியை கடுமையாக விமர்சித்த ஓபிஎஸ்..

Spread the love

மதுரை மாநாட்டில் எடப்பாடி பழனிசாமிக்கு கொடுத்த புரட்சித்தமிழர் பட்டத்தை தமிழக மக்கள் நிச்சயம் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் . மதுரை மாநாடு மாபெரும் தோல்வியை தழுவியுள்ளது என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார் .

மதுரை மாநகரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்றது.

தொண்டர்கள் புடைசூழ மாநாட்டிற்கு வருகை எடப்பாடி பழனிசாமிக்கு புரட்சி தமிழர் என்ற பட்டம் வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த பொன்விழா எழுச்சி மாநாடு குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது :

மதுரை மாநாட்டில் எடப்பாடி பழனிசாமிக்கு கொடுத்த புரட்சித்தமிழர் பட்டத்தை தமிழ்நாடு மக்கள் நிச்சயம் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் மதுரை மாநாடு முற்றிலும் தோல்வியை தழுவியுள்ளது .

கொடுத்து கொடுத்து சிவந்த கரத்திற்கு சொந்தக்காரர் எம்ஜிஆர். அவர் உருவாக்கிய கட்சி அதிமுக. எம்ஜிஆர் முகத்தை பார்த்தாலே வாக்குகள் குவியும் . எம்ஜிஆர் மறைவுக்கு பின் அதிமுக அழிந்துவிடும் என மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி கனவு கண்டார். ஆனால் கட்சியின் தூணாக இருந்த ஜெயலலிதா கட்சியையும் தொண்டர்களையும் வலுப்படுத்தி மிகப்பெரிய இயக்கமாக உருவெடுத்தார் .

மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் சேவல் சின்னத்தில் நின்று முதன்முறையாக அதிமுக சார்பில் சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டேன். தொண்டர்களின் அன்பாலும் ஆதரவாலும் தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டேன்.

தமிழகத்தில் தற்போது இருக்கும் அரசியல் சூழலில் நாம் தான் உண்மையான அதிமுக என்பதை நிரூபித்து காட்ட வேண்டிய நிலையை உருவாக்க வேண்டும் என தொண்டர்களுக்கு ஓ. பன்னீர்செல்வம் அறிவுறுத்தியுள்ளார்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் கூட்டம் நடத்திய பின்னர் உண்மையான மாநாட்டை நாடே உற்றுநோக்கும் வகையில் நடத்துவோம் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார் .


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours