கொசு விரட்டும் மருந்தால் தீ விபத்து – 4 பேர் உயிரிழப்பு.

Spread the love

சென்னை: மணலி பகுதியில் வீட்டில் கொசு விரட்டும் லிக்விட் இயந்திரத்தால் தீ விபத்து ஏற்பட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு.

நேற்று இரவு படுக்கையில், கொசு விரட்டி மருந்து ஆன் செய்துவிட்டு உறங்கியுள்ளனர் என தெரிகிறது. அப்போது இரவில் கொசு விரட்டி மருந்து இயந்திரத்தை மூலம் மின்கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் தீ விபத்து ஏற்பட்டு புகைமூட்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு, 60வயதான மூதாட்டி சந்தான லட்சுமி, 10 வயதான சிறுமி சந்தியா, 8 வயதான சிறுமி ரக்ஷிதா, 7 வயதான சிறுமி சந்தான பவித்ரா ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

புகை மூட்டம் அதிகமாக இருந்ததாலும்,  கதவு திறக்கப்படாத காரணத்தாலும் அக்கம் பக்கத்தினர் வீட்டினுள் சென்று பார்த்த போது 4 பெரும் சடலமாக இருந்துள்ளனர். இதனை அடுத்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உயிரிழந்த 4 பேர் உடல்களும் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்த விசாரணையை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து குறித்த உறுதியான காரணங்கள் விசாரணைக்கு பின்னர் தெரியவரும் என கூறப்படுகிறது. இரவோடு இரவாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours