இளம் பேச்சாளர்களை கண்டறிந்து ஊக்குவிக்க வேண்டும்… முதலமைச்சர்!

Spread the love

இளம் பேச்சாளர்களை கண்டறிந்து ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கலைஞர் நூற்றாண்டு விழா பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பரிசளிக்கும் விழா சென்னை கோயம்பேடு புனித தாமஸ் கல்லூரியில் நடைபெற்றது.

மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்‍டிருந்த இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வெற்றி பெற்ற கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பரிசுகளை வழங்கி கவுரவித்தார்.

நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய முதலமைச்சர் வரலாறு போற்றக் கூடிய பேச்சாளர்களை உருவாக்கும் தளம் தான் பேச்சுப்போட்டி என்றும் இளம்பேச்சாளர்கள், தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் கிடைத்திருக்கும் பெரும் பரிசு என்றும் குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சியில் மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், மாநில அ‍மைச்சர்கள் பொன்முடி, மா‍ சுப்ரமணியன், மேயர் ஆர் பிரியா, அதிகாரிகள், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
பரதநாட்டியம், கரகாட்டம், காவடியாட்டம், சிலம்பாட்டம் ஆகியவையும் இந்நிகழ்ச்சியில் இடம் பெற்றிருந்தது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours