634 விளையாட்டு வீரர்களுக்கு அனுமதி !

Spread the love

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க 634 விளையாட்டு வீரர்களுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
எதிர்வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்காக 38 விளையாட்டு பிரிவுக‍ளை சேர்ந்த 634 விளையாட்டு வீரர்களுக்கு அனுமதி அளித்துள்ளது.
நீரஜ் சோப்ரா, பிரக்ஞானந்தா ரமேஷ் பாபு, லோவ்லினா போர்கோஹைன், நிகத் ஜரீன், லக்ஷய் சென் மற்றும் மீராபாய் சானு சாய்கோம் உட்பட 634 வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.
கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மொத்தம் 572 தடகள வீரர்கள் கலந்து கொண்டு 16 தங்கம் உட்பட 70 பதக்கங்களுடன் இந்தியா திரும்பியது என்பது குறிப்பிடத்தக்கது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours