உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் நீரஜ் சோப்ரா இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
உலக தடகள சாம்பியன்ஷிப் 2023 ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட்டில் இம்மாதம் 19 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
நேற்று நடைபெற்ற ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 88 புள்ளி ஏழு ஏழு மீட்டர் தொலைவிற்கு ஈட்டி எறிந்து முதல் சுற்றிலேயே இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்.
இவர் கடந்த முறை சாதனையான 83 மீட்டர் சாதனையை முறியடித்து இரண்டு மற்றும் மூன்றாவது சுற்றில் பங்கேற்காமலேயே நேரடியாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
இதன் மூலம் உலக தரவரிசை பட்டியலில் இடம் பெற்றுள்ள நீரஜ் சோப்ரா, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய நீரஜ் சோப்ரா !
![](https://politrics.in/wp-content/uploads/2023/08/Untitled-1-15-2.jpg)
You May Also Like
மீனவர்கள் பிரச்சினையில் நிரந்தரத் தீர்வு !
May 26, 2024
6-ம் கட்ட வாக்குப்பதிவு சதவீதம் என்ன ?!
May 25, 2024
More From Author
சென்னை – மதுரை இடையே விமான டிக்கெட் கட்டணம் 5 மடங்கு உயர்வு
January 13, 2024
அசத்தலான மாங்காய் ரசம்…!
May 16, 2024
+ There are no comments
Add yours