இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் அங்கீகாரத்தை உலக மல்யுத்த கூட்டமைப்பு ரத்து செய்துள்ளது. இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்கு தேர்தல் நடத்தப்படாததை காரணம் காட்டி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
முன்னதாக 45 நாட்களுக்குள் இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கான தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என உலக மல்யுத்த கூட்டமைப்பு அறிவுறுத்தியுள்ளது. மேலும், தேர்தல் நடைபெறாவிட்டால் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும் அந்த அமைப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்கு கடந்த ஜூன் மாதம் தேர்தல் நடைபெற இருந்த நிலையில், வீரர்களின் எதிர்ப்பு மற்றும் தொடர் போராட்டம் காரணமாக தேர்தல் ஒத் வைக்கப்பட்டது. உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் அடுத்த மாதம் 16 ஆம் தேதி தொடங்கி 24 ஆம் தேதி வரை பெல்கிரேட்டில் நடைபெறவுள்ளது குறிப்பித்தக்கது.
+ There are no comments
Add yours