கோவை பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி !

Spread the love

கோவை பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

இப்பல்கலைக்கழத்தின் 38வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
தமிழக ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான ஆர் என் ரவி தலைமையேற்று பல்கலைக்கழக அளவில் முதலிடம் பிடித்த ஆயிரத்து 564 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினார்.

பட்டமளிப்பு விழாவில் மாநில உயர்கல்வித் துறை அமைச்சரும், பல்கலைக்கழக இணை வேந்தருமான பொன்முடி, பிரதமரின் ‍பொருளாதார ஆலோசனை குழு உறுப்பினர் சஞ்சீவ் சன்யால் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர்.

இதனிடையே திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆளுநர்ஆர் என் ரவி பழநி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய குடும்பத்துடன் வருகை புரிந்தார். சாயரட்சை பூஜையில் கலந்து கொண்ட ஆளுநர், பழநி தண்டாயுதபாணியை தரிசனம் செய்தார். அதை தொடர்ந்து போகர் ஜீவ சமாதியில் வழிபாடு நடத்திய அவர், தங்க தேரை இழுத்து சாமி தரிசனம் செய்தார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours